ரூ.1.55 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

கொடுமுடி, மே 23:  ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில், 2,682 கிலோ நிலக்கடலை கிலோ  அதிகபட்சமாக ரூ.61.00க்கும், குறைந்தபட்சமாக ரூ54.50க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 202க்கு விற்பனையானது. மேட்டுக்கடையில் நாளை மின்தடை

ஈரோடு, மே 23: மேட்டுக்கடை துணை மின்நிலையத்தில் நாளை (24ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதனால், வேப்பம்பாளையம் (அம்மன் கார்டன் பகுதி மட்டும்), நஞ்சனாபுரம் (கொங்கு நேஷனல் பள்ளி மட்டும்), கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வண்ணாங்காட்டுவலசு, பாறைவலசு, நத்தக்காட்டுபாளையம், புங்கம்பாடி, அறவிறக்கு, மேட்டுப்பாளையம், இளையாக்கவுண்டன்பாளையம், தொட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories: