தொழிலாளியை கரடி தாக்கியதாக வாட்ஸ் ஆப் வதந்தியால் பரபரப்பு

மஞ்சூர், மே 23:   தொழிலாளியை தாக்கிய கரடியை பொதுமக்கள் அடித்து கொன்றதாக வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சூர் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை கரடி கடுமையாக தாக்கியதில் படுகாயத்துடன முகம், கை, கால்களில் ரத்தம் கசிவது போலவும் மற்றும் தொழிலாளியை கடித்த கரடியை பொதுமக்கள் சிலர் அடித்து கொன்று போட்டதாக படங்கள் நேற்று முன்தினம் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதலங்களில் வெளியானது. சம்பவம் நடந்த இடம் மஞ்சூர் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை நேரில் கண்டது போல் ஆளாளுக்கு தகவல் பரிமாறியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வாட்ஸ் ஆப்பில் வந்த தகவல் குறித்து விசாரனை நடத்தினார்கள்.

Related Stories: