ஜெயங்கொண்டம், மே 23: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை போனது.ஜெயங்கொண்டம் அருகே மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(-59). இவர் ஆண்டிமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து கடந்த ஆண்டுஓய்வுபெற்று வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 5 நாட்களாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான நேற்று கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக ராமச்சந்திரன் மனைவி இந்திரா மற்றும் மகள் கார்த்திகா ஆகியோரை அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் சாமிக்கு தீபாரதனை நடைபெறும் நேரத்தில் மகள் கார்த்திகா தந்தைக்கு போன் செய்து கோவிலுக்கு அழைத்துள்ளார். இதனால் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றுவிட்டார்.