ஈரோடு, மே 22: ஈரோடு நசியனூர் ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி(60). விவசாயி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பின் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். இதனால் கடந்த 19ம் தேதி இரவு தெய்வசிகாமணி கதிரம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் விஷம் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தெய்வசிகாமணியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.