ஈரோடு, மே 22: பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (22ம் தேதி) காலை 9 மணிக்கு நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கை நடக்க உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வுக்கான கடிதம் கல்லூரி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு கடிதம் கிடைக்கப்பெறாத மாணவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன், பெற்றோருடன் கல்லூரி கலையரங்கில் நடக்கும் கலந்தாய்வில் நேரில் பங்கேற்கலாம்.