ராமநாதபுரம், மே 22: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட தினமான நேற்று, காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் அமைதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மணிக்கூண்டு பகுதியில் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.