வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

மண்ணச்சநல்லூர், மே 21: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (37). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் சச்சிதானந்தம் (42), பிரபு (38). ஆனந்தகுமாருக்கும். சச்சிதானந்தம் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு ஆனந்தகுமார் சிறுகனூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சச்சிதானந்தமும். பிரபுவும் ஆனந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி இருவரும் ஆனந்தகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதில் ஆன்ந்தகுமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் ஆனந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஆனந்தகுமார் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்து வந்த சச்சிதானந்தம், பிரபு இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Related Stories: