பாலக்காட்டு மாரியம்மன் கோயிலில் உற்சவ விழா

துறையூர், மே 21:துறையூரில் பாலக்காட்டு மாரியம்மன் கோயிலில் உற்சவ விழா கடந்த 16ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 2ம் நாளில் மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம், அக்னி சட்டி, வேப்பிலை கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 3ம் நாளில் சிம்ம வாகனத்திலும், 4ம் நாளாளில் குதிரை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நேற்று தேர் வடம் பிடித்தலும் நடைபெற்றது.  இன்று (21ம் தேதி) பொங்கல், மாவிளக்கு, கிடா வெட்டுதல், அலகு குத்துதல் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறுகிறது. 7ம் நாளான 22ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது.

Related Stories: