அய்யம்பேட்டை மயான பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

பாபநாசம், மே 21: அய்யம்பேட்டை மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட குடமுருட்டி ஆற்றின் கரையில் பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திலும், மயானத்துக்கு செல்லும் வழியிலும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே நில அளவையரை கொண்டு அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் மயானத்தில் குடிநீர் மற்றும் குளியலறை வசதி செய்து தர வேண்டும். மேலும் இப்பகுதியில் தனியார் கொண்டு வந்து கொட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இவற்றை தடுக்க அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேரூர் செயலாளர் துளசி அய்யா மனு அளித்துள்ளார்.

Related Stories: