கும்மிடிப்பூண்டி, மே 21: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில் 64ம் ஆண்டு மகோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 14ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனை, அர்ச்சனை, தீர்த்த பிரசாத விநியோகம், வடமாலை சாற்றுதல், வெண்ணை காப்பு சாற்றுதல், மலர் அலங்காரம் நடந்தது. வெள்ளிக்கிழமை மகா அர்ச்சனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், சீதாராமர் திருக்கல்யாண திருமாங்கல்ய சரசு வழங்குதல் நடந்தது.