சென்னிமலை அருகே சாலையோரம் வீசப்பட்ட மாடு

சென்னிமலை, மே 19:   கேரளாவுக்கு லாரியில்  கொண்டு செல்லும் போது மாடு இறந்ததால் சென்னிமலை அருகே சாலை ஓரம் போட்டு விட்டு சென்றதாக  பொதுமக்கள் தகவல் ெதரிவித்தனர். சென்னிமலை அருகே ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையில் நொய்யல் உள்ளது. இங்கு நேற்று சாலை ஓரம் பசு மாடு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னிமலை, காங்கயம், பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மாடுகள் கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஒரு லாரியில் மாடுகளை கொண்டு சென்ற போது ஒரு மாடு இறந்து விட்டதால், அதனை யாருக்கும் தெரியாமல் சாலை ஓரம் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: