கும்பகோணம், மே 19: கும்பகோணம் வட்டார போக்குவரத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் , வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கிடுசாமி, தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார், போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர். இதில் 44 பள்ளிகளில் உள்ள 118 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா, ஓட்டுனர்கள் உரிமம், அவர்களுக்கான அடையாள அட்டை, வாகனத்தில் அவசர வழிகள், காற்றோட்டமுள்ள ஜன்னல்கள், வாகனத்தில் எளிதில் வெளியில் வரக்கூடிய அளவில் இருக்கைகள், தரைதளம், முதலுதவி பெட்டி, படிக்கட்டுகள், வேக்கட்டுப்பாட்டுகருவி, தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் நிருபர்களிடம் கூறுகையில்,