பழநி, மே 17: நெடுஞ்சாலை பராமரிப்பை தனியாருக்கு வழங்கக்கூடாதென நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். கோட்ட இணை செயலாளர் பாலமுருகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணைத்தலைவர் செல்வம் வரவேற்று பேசினார். கோட்ட செயலாளர் மணிமாறன் பொதுக்குழு விளக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் சிறப்புரையாற்றினார்.