முசிறியில் இந்தியன் வங்கி கிளை புதிய கட்டிடம் திறப்பு

திருச்சி, மே 17: முசிறியில் இந்தியன் வங்கி கிளையின் புதிய கட்டிடத்தை மண்டல மேலாளர் திறந்து வைத்தார். இந்தியன் வங்கி முசிறி கிளையின் புதிய கட்டிடம் முசிறியில் துறையூர் பைபாஸ் ரோட்டில், அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டது. இக்கிளையை இந்தியன் வங்கி திருச்சி மண்டல மேலாளர் சாமிநாதன் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இக்கிளையோடு இணைந்த ஏடிஎம்., பிஎன்ஏ., போன்ற வசதிகள் கொண்ட இ-லாஞ்சை இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் ராஜாமணி திறந்து வைத்தார். இந்த விழாவைத் துவக்கி வைத்து மண்டல மேலாளர் சாமிநாதன் பேசுகையில், இந்தியன் வங்கி, வாடிக்கையாளர் சேவைக்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும், வாடிக்கையாளர் சேவையில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்தியன் வங்கி அனைத்து விதங்களிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். விழாவின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முசிறி, குளித்தலை, வளையெடுப்பு, மெய்க்கல்நாயக்கன்பட்டி இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மண்டல மேலாளர் கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கினார். இதில் 154 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி கடன்கள் வழங்கப்பட்டது.

Related Stories: