அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, மே 17: மத்திய அரசை போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஓய்வூதியர்சங்கம் வலியுறுத்தியுள்ளது.  ரங்கத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ரெங்கசாமி கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் கலியமூர்த்தி வரவு, செலவு தாக்கல் செய்தார். கூட்டத்தில் மத்திய அகவிலைப்படி 3 சதவீத வழங்கியுள்ளது போல தமிழக அரசும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் சுதர்சனன் வரவேற்றார்.  துணைச்செயலாளர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

Related Stories: