திருச்சி, மே 17: மத்திய அரசை போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஓய்வூதியர்சங்கம் வலியுறுத்தியுள்ளது. ரங்கத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் ரெங்கசாமி கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் கலியமூர்த்தி வரவு, செலவு தாக்கல் செய்தார். கூட்டத்தில் மத்திய அகவிலைப்படி 3 சதவீத வழங்கியுள்ளது போல தமிழக அரசும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் சுதர்சனன் வரவேற்றார். துணைச்செயலாளர் ரெங்கசாமி நன்றி கூறினார்.