ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் மற்றும் வல்லம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. பைக், கார், லாரி, கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தயாரிக்கபடும் பொருட்களை ஏற்றி செல்ல, கனரக மற்றும் இலகுரக வாகனங்களை, சிப்காட் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் தொழிற்சாலைக்கும் வரும் கார், கன்டெய்னர் லாரிகளை இந்த சாலையினை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தி வைகப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். காலை, மாலை நேரத்தில் சுங்குவார்சத்திரம், வல்லம் சிப்காட் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொது மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.