கல்லாக்கோட்டையில் மதுபான உற்பத்தி ஆலையை முற்றுகையிட்ட 232 பேர் மீது வழக்கு

கந்தர்வகோட்டை, மே 16: கல்லாக்கோட்டை தனியார் மதுபான உற்பத்தி ஆலையை முற்றுகையிட முயன்ற மகளிர் ஆயம் தலைவர் லட்சுமி உட்பட 232 பேர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மதுபான உற்பத்தி ஆலையை மூட வலியுறத்தி மகளிர் ஆயம் சார்பில் நேற்று முன்தினம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் ஆயம் தலைவர் லட்சுமி உட்பட 232 பேர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக கூடுதல், தடுத்து வைப்பது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: