மதுரை, மே 15: மதுரையில் மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை எஸ்.ஆலங்குளம் சிஆர்ஓ காலனியை சேர்ந்தவர் வேல்முருகன்(28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் மனைவி நாகஜோதியுடன் கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.