சென்ைன, மே 15: கோயம்பேடு பணிமனையில் அரசு பஸ் கன்டக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புதுப்பேட்டை தெற்கு கூவம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (44). கோயம்பேடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் கன்டக்டராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் பணிக்கு வந்த இவர், பணிமனையில் உள்ள அறைக்கு சென்றபோது, திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.சக ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வந்தவர்கள், கோபியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.