காடையாம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை

காடையாம்பட்டி, மே 15: காடையாம்பட்டி அருகே கணவாய்ப்புதுர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (32) கூலி தொழிலாளி. இவருக்கு மஞ்சுளா (27) என்ற மனைவியும், 2 பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.  மது குடிக்கும் பழக்கம் உள்ள பரமசிவம், அதே பகுதியில் பலரிடம் பணம் கடனாக வாங்கி மது குடித்து செலவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கடனை கட்ட முடியாமல் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார்.

Related Stories: