பேருந்து மோதி மூதாட்டி பலி

குன்றத்தூர், மே 15: குன்றத்தூர், நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (62). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊரான காஞ்சிபுரம் அடுத்த செய்யாறு சென்று முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டு மீண்டும் நேற்று நந்தம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருவதற்காக குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மூதாட்டி லட்சுமி மீது பலமாக மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது பஸ்சின் முன் சக்கரம் லட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: