நாமகிரிப்பேட்டை, மே 15: வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் 1,600 மூட்டை மஞ்சள் ₹65 லட்சத்திற்கு ஏலம் போனது.
நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்தனர். அதேபோல, ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில், மொத்தம் 1,600 மஞ்சள் மூட்டை விற்பனைக்கு வந்தது.