பாளையம் செபஸ்தியார் ஆலய திருவிழா சப்பர பவனி

பெரம்பலூர், மே 15: பெரம்பலூர்  அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் புனித  ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு  திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை செபஸ்தியார் கோவில்  வளாகத்தில் பாளையம் பங்குகுரு ஜான் கென்னடி, இறைவார்த்தை சபையை சேர்ந்த  விக்டர்ரோச் ஆகியோர் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி  நடத்தினர். பின்னர் புனித செபஸ்தியார் சொரூபம் தாங்கிய ஆடம்பர சப்பர  பவனி நடந்தது. இதில் அருட்சகோதரிகள், ஆரோக்கிய மாதா ஆலய முக்கியஸ்தர்கள் மற்றும் பாளையம், ரங்கநாதபுரம், புதுநடுவலூர், பெரம்பலூர் பகுதிகளை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: