கரூர் செங்குந்தபுரம் பகுதி ராமகிருஷ்ணபுரம் சாலையில் பாதாள சாக்கடை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், மே 15: கரூர் செங்குந்தபுரம் பகுதியில் ராமகிருஷ்ணபுரம் பகுதிக்கு செல்லும் சாலையில் பழுதடைந்த பாதாள சாக்கடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் இருந்து ராமகிருஷ்ணபுரம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 300க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக, கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் சென்று வருகிறது.

மேலும், கரூர் நகரப்பகுதிகளை சுற்றிலும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், ராமகிருஷ்ணபுரம் செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக, ராமகிருஷ்ணபுரம் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. மேலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.முக்கிய வாகன போக்குவரத்து சாலையான இந்த பகுதியை  உடனடியாக சீரமைத்து முழுமையான போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: