நெல்லை, மே 14: பாளை குலவணிகர்புரம் மகான் காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் அஸர் தொழுகையும், தொடர்ந்து ஜியாரத் மற்றும் கந்தூரி கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்ஹா தலைவர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். இணை செயலாளர்கள் அப்துல் கரீம், வருசை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காதர் அவுலியா பள்ளிவாசல் இமாம் அஷ்ரப் அலி ஆலிம் கிராஅத் ஓதினார்.