ராமநாதபுரம், மே 14: ராமநாதபுரம் தாலுகா உச்சிப்புளி அருகே பிள்ளைமடம் கிராமத்தில் வசித்து வரும் முருகன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், ‘‘எனது மனைவி லட்சுமி கர்ப்பமான நாள் முதல் தமிழக அரசின் தாய்சேய் நல திட்டத்தின்படி மருத்துவ சிகிச்சை தொடர்ச்சியாக பெற்று கடந்த 9ம் தேதி உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தேன். அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். பிரசவ வார்டில் அவசர சிகிச்சை தேவை எனக் கூறியும் பணியில் இருந்த மருத்துவர்கள் எந்தவித சிகிச்சையும் செய்யாமல் அலட்சியப் போக்குடன் இருந்தார்கள்.