சாயல்குடி, மே 14: கடலாடி புனித அந்தோணியார் தேவாலய திருவிழா கடந்த திங்கள் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒருவாரகால திருவிழாவில் தினந்தோறும் திருப்பலி மற்றும் பொது ஜெபம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. வெள்ளிக்கிழமை இரவு புனித அந்தோணியார் சப்பரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவகங்கை மறைமாவட்ட முதன்மை பங்குதந்தை ஜோசப்லூர் துராஜாஅடிகளார் தலைமையில் கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடந்தது.