கரூர், மே 14: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம் பேரூந்து நிலையம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், ஈசநத்தம், ஆண்டிப்பட்டி கோட்டை, பள்ளபட்டி அண்ணா நகர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.இந்நிலையில், பள்ளபட்டி அண்ணா நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலஹாசன் பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான், அவர், நாதுராம் கோட்சே, நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன், அதற்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என பேசியுள்ளார்.