சாதனையாளர்களுக்கு ராஜகலைஞன் விருது

திருச்சி, மே 10:  தமிழக பண்பாட்டுக்கழகம் சார்பில் கல்வி சேவையை பாராட்டி நல்லாசிரியர்களுக்கும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுக்கு ராஜகலைஞன் விருது, தங்கப்பதக்கம், நற்சான்று வழங்கும் விழா மற்றும் இசை விழா திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்றது. விழாவை ரங்கம் ரங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவிற்கு தமிழக பண்பாட்டுக்கழக கவுரவ தலைவர் உஸ்மான்சாகிப் தலைமை வகித்தார்.

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலரும், முதன்மை செயலாக்க இயக்குனருமான ரவிச்சந்திரனுக்கு ராஜகலைஞன் விருதை கலை பண்பாட்டுத்துறையின் இணை இயக்குனர் குணசேகரன் வழங்கினார். மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், திரைத்துறையினருக்கும் விருது வழங்கப்பட்டது. முன்னதாக தமிழக பண்பாட்டுக்கழக செயலாளர் கதிரேசன் வரவேற்றார். பொருளாளர் ஜேசுபால்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories: