திருச்சி, மே 10: தமிழக பண்பாட்டுக்கழகம் சார்பில் கல்வி சேவையை பாராட்டி நல்லாசிரியர்களுக்கும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுக்கு ராஜகலைஞன் விருது, தங்கப்பதக்கம், நற்சான்று வழங்கும் விழா மற்றும் இசை விழா திருச்சி தேவர் ஹாலில் நடைபெற்றது. விழாவை ரங்கம் ரங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவிற்கு தமிழக பண்பாட்டுக்கழக கவுரவ தலைவர் உஸ்மான்சாகிப் தலைமை வகித்தார்.