திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவருடன் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் தளபதி உடனிருந்தார். அப்போது பேசிய திருநாவுக்கரசர், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும். மோடி அலை வீசவில்லை. வெளிநாட்டில் கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் மோடி இதுவரை ஒரு ரூபாய் கூட போடவில்லை.