வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை குழுவினர் கவனமாக பணியாற்ற வேண்டும் என பொதுபார்வையாளர் ஓம்பிரகாஷ் ராய் பேசினார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, 126 பறக்கும்படை குழுக்கள் போடப்பட்டு, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளருக்கு பணம் விநியோகம் அதிகம் இருப்பதை அறிந்த பொது பார்வையாளர் கூடுதலாக 30 பறக்கும்படை குழுவை நியமிக்க உத்தவிட்டார். அதன்படி மொத்தம் 156 பறக்கும்படை குழுக்கள் போடப்பட்டுள்ளது. பறக்கும்படை குழுக்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொதுபார்வையளர் ஓம்பிரகாஷ் ராய் பேசும்போது, ‘‘இடைத்தேர்தல் என்றால், விதிமீறல் ஏற்படும் அதனை தடுக்க வேண்டும். கடந்த மாதம் 22ம் தேதி முதல் தற்போது வரை நீங்கள் பணியாற்றியதை விட இனிமேல்தான் கவனமாக பணியாற்ற வேண்டும். வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும்படையினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். விதிமீறல் தொடர்பாக புகார் பற்றி தகவல் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும்.