திருப்பரங்குன்றம் தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்கட்ட பரிசோதனை துவங்கி, நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், அதிமுக வேட்பாளர் முனியாண்டி, அமமுக வேட்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட 37 பேர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் யாருக்கு ஓட்டு போட்டோம் என வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய விவிபெட் இயந்திரத்துடன் கூடிய 356 மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. 37 பேர் போட்டியிடுவதால், 3 வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்படப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள், மதுரை மாவட்டத்தில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தாமல் இருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் சேகரிக்கப்பட்டு,