நெல்லை, மே 10: பாளையங்கோட்டை எஸ்.பி. ஆபீஸ் அருகே மிலிட்டரிலைன் பள்ளிவாசல் வளாகத்தில் ஆவின் பார்லர் திறப்பு விழா நடந்தது. தொழிலதிபர் எம்.கே.எம்.செய்யது அகமது கபீர் தலைமை வகித்தார். மிலிட்டரிலைன் பள்ளிவாசல் கமிட்டி தலைவர் செய்யது அப்பாஸ் சாகிப், அரசன் சூப்பர் மார்க்கெட் அதிபர் முகமது ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பார்லரை செய்யது குரூப்ஸ் அதிபர் பத்கூர் ரப்பானி திறந்து வைத்தார்.