சாயல்குடி, மே 9: முதுகுளத்தூர், கடலாடி கடைவீதி மற்றும் சாலையோரங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பெறுத்தப்பட உள்ளதாக டி.எஸ்.பி ராஜேஸ் தெரிவித்தார்.முதுகுளத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை நடப்பதாக டி.எஸ்.பி. ராஜேஷ்க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முதுகுளத்தூர் பஸ்நிலையம், பஜார், காந்திசிலை ஆகிய தெருக்களிலிருந்த 10க்கும் மேற்பட்ட பெட்டிகள், டீ கடைகளில் சோதனையிட்டனர். அவர்களிமிருந்து 100க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அப்போது டி.எஸ்.பி. ராஜேஷ் கூறும்போது, ‘முதுகுளத்தூர் சரகத்திலுள்ள கீழத்தூவல், தேரிருவேலி, பேரையூர், கடலாடி, கீழச்செல்வனூர், முதுகுளத்தூர், இளஞ்செம்பூர் ஆகிய காவல்நியை பகுதிகளில் உள்ள சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும், தடை செய்யப்பட்ட புகையிலை விற்றாலோ, கள்ள மார்க்கெட்டில் பிராந்தி விற்றாலோ பறிமுதல் செய்வதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.