மதுரை, மே 9: செல்போன்களை அதிகமாக பயன்படுத்தும் மாணவ-மாணவிகள் சுயமாக சிந்திக்கும் திறனை இழந்து வருகின்றனர் என்று மனநல மருத்துவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.இன்றைய நாகரீக உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்து விட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர் செல்போன் மற்றும் லேப்டாப்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் வீட்டிலிருந்து, டிவியில், சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளித்த காலம்போய், இன்று கையடக்க போன், லேப்டாப்களில் நெட் இணைப்புடன் எங்கிருந்தாலும் அந்த இடத்திலேயே சினிமா, விளையாட்டு, தொடர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க முடிகிறது. இந்த வளர்ச்சி, மாணவ சமுதாயத்திற்கு ஒரு வழியில் உதவியாக இருந்தாலும், பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. செல்ேபான் பேசுவதற்கு மட்டுமே என்ற நிலை மாறி, செல்போனில் மெசேஜ், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், அந்த 5 பேரும் செல்போன் வைத்துள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் டிவி பார்ப்பதையே தவிர்க்க வேண்டும். ஆனால் நள்ளிரவையும் தாண்டி, குழந்தைகள் உள்ளிட்ட மாணவ-மாணவியர் பலரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். இது ேவதனையான, விபரீதத்தை ஏற்படுத்தும் செயலாகும் என்பது பல பெற்றோருக்கு தெரிவிதில்லை.இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மனநலத்துறை தலைவர் குமணன் கூறுகையில், ``வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட தொடர்புகளில் நல்ல விஷயங்களைவிட, தேவையில்லாத தவறான விஷயங்களே அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தும் போது, தவறான, ஆபத்தான இடத்திற்கு கூட்டிச் சென்று விடுகிறது. இதுதான் உண்மை. அனைத்திற்கும் மேலாக செல்ேபானை அதிகளவில் பயன்படுத்தும் மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனை, கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். கவனச்சிதறலும் ஏற்படுகிறது. ஆபாசம், வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது.