புதுக்கோட்டை,மே9: கொளுத்தும் கத்திரி வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது என்று கலெக்டர் கூறினார். புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கால்நடைகளை கோடை காலங்களில் குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து சரியான பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாக்கலாம். அந்த வகையில் கால்நடைகளை கடும் வெப்பம் நிலவும் பகல் நேரத்தில் மர நிழலிலோ அல்லது காற்றோட்டமான நிழலுடன் கூடிய திறந்த வெளியில் கட்டி வைக்க வேண்டும். கால்நடைகளின மீது தண்ணீர் தெளித்து கழுவுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது.