கீழக்கரை, மே 9: கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி வாகையடி ஊரணியில் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியானது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் வாவுடையார் முனியய்யா கோயில் அருகில், வாகையடி ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் சுமார் ஒன்றரை வயதுடைய புள்ளிமான் ஒன்று, தண்ணீர் குடித்தது. அப்போது ஊரணியின் சேற்றில் சிக்கி மீளமுடியாமல் பலியானது. இது குறித்து இப்பகுதி மக்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.