ஊத்துக்கோட்டை, மே 9: ஊத்துக்கோட்டை, அதன் சுற்றுப்புறத்தில் நேற்று லேசான மழையுடன் சூறைக்காற்று வீசியது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. எதிர்பார்த்தபடி பலத்த மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள தாராட்சி தொம்பரம்பேடு, சீத்தஞ்சேரி ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு மேக மூட்டங்கள் காணப்பட்டது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதில் தாராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன் குட்டை அருகே மின்கம்பம் சாய்ந்தது, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் சீத்தஞ்சேரி சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது.