காஞ்சிபுரம், மே 9: காஞ்சிபுரத்தில் பாஜக கட்சியின் நகர துணைத்தலைவர் மோகன்லால் (52) என்பவர் செங்கழுநீரோடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். அவரிடம் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து நேற்று முன்தினம் மருத்துவர் பேசுவதாக கூறி மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது, தனக்கு தங்க சங்கிலி வேண்டும். அறுவை சிகிச்சை பணிக்கு செல்லும் முன் மருத்துவமனைக்கு வந்து காட்டுமாறு மர்ம நபர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மோகன்லால் தன் மகன் தினேஷ்குமார் (37) மூலம் 5 க்கும் மேற்பட்ட தங்க சங்கிலியை கொடுத்து அனுப்பியுள்ளார். தங்க சங்கிலியுடன் மருத்துவமனைக்கு தினேஷ்குமார் சென்றபோது மருத்துவமனை வாசலில் நின்ற மர்ம நபர், மருத்துவர் அறுவை சிகிச்சை பணியில் உள்ளதாகவும் தன்னிடம் நகைகளை கொடுத்தால் காட்டி விட்டு மீதியை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய தினேஷ்குமார் நகைகளை கொடுத்துவிட்டு காத்திருந்துள்ளார்.