குறுகலாக மாறிய சாலை

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் - ஆசாரிபள்ளம் சாலையில் சாலை அகலப்படுத்தப்பட்டு இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் ஒரு பக்கம் முழுவதும் வாகன பார்க்கிங் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகலாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலையை முழுவதுமாக மறித்து கார்கள், இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கி திணறுகின்றன. மாலை வேளையில் இந்த பகுதியில் நெரிசல் அளவு அதிகமாக உள்ளது.

Related Stories: