தொண்டி, மே 8: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்களின் விற்பனை எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. போலிசார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புகையிலை பொருட்கள், ஹான்ஸ், சிகரெட், பான்பராக் உள்ளிட்ட பொருட்களால் மனிதருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் ஆபத்து ஏற்படுவதால் இவற்றை விறபனை செய்வதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் தொண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் புகையிலை பொருட்களின் விற்பனை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் போலீசார் இது குறித்து அவ்வப்போது சோதனை செய்தனர். ஆனால் தற்போது இவ்வகையான சோதனைக்கு வராததால் கடைக்காரர்களும் தைரியமாக விற்பனை செய்கின்றனர். அனுமதியில்லாமல் மதுபானம் விற்போரை பிடிக்கும் போலிசார் தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.