கீழக்கரை, மே 8: கீழக்கரையில் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர்களின் குடியிருப்பு கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அடிப்படை வசதிகளும் அறவே இல்லாததால் காவலர்கள் வெளியில் வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர்.கீழக்கரை காவல் நிலையத்திற்கு பின்புறம் நான்கு கட்டடங்களாக போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முறையான பராமரிப்பு இல்லாததால் கடுமையான சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் இங்கு காவலர்கள் தங்குவதற்கு அச்சப்படும் சூழலே உள்ளது, இந்த குடியிருப்புகள் அனைத்தும் இடிந்து விழும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கி தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் போதுமான பராமரிப்பு இல்லாததாலும் காவலர்கள் வெளியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.