மேச்சேரி, மே 8: மேச்சேரி அருகே கரடுமுரடான சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி எம்.காளிப்பட்டியில் இருந்து காவிரி கல்வி நிறுவனங்கள் வழியாக நங்கவள்ளி செல்லும் சாலை கரடுமுரடாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.