கரடுமுரடான சாலையை சீரமைக்க கோரிக்கை

மேச்சேரி, மே 8: மேச்சேரி அருகே கரடுமுரடான சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி எம்.காளிப்பட்டியில் இருந்து காவிரி கல்வி நிறுவனங்கள் வழியாக நங்கவள்ளி செல்லும் சாலை கரடுமுரடாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலையில், மழைக்காலங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. வழி நெடுகிலும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: