செந்துறை, மே 8: செந்துறை அருகே அங்கன்வாடி மையத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து சென்ற சத்துணவு மாவு மூட்டைகளை மீட்டதுடன் அமைப்பாளர் மீது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர். செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் 2 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சத்துணவு மையத்தில் இருந்து 2 சத்துணவு மாவு மூட்டைகளை அங்கன்வாடி அமைப்பாளர் அம்புசம் மகன்கள் விற்பனை செய்ய எடுத்து வந்தனர். அப்போது லாதா என்பவர் கையும் களவுமாக பிடித்துள்ளார்.