வேலூர், மே 8: வேலூர் மத்திய சிறையில் 36 கைதிகள் நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்கினர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரம்ஜான் நோன்பு. ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். ஷல்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவர். இந்தாண்டு ரம்ஜான் நோன்பு நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.