பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதலில் மேலும் 4 பேர் கைது

பண்ருட்டி, மே 7:  பண்ருட்டி அருகே கோ.குச்சிப்பாளையம் கிராமத்தில் வாலிபால் விளையாடியதில் இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். இரு வேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க தொடர்ந்து மூன்றாவது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் இரு தரப்பை சேர்ந்த தயாளன், தர்மராஜ் ஆகியோர் தனித்தனியாக பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 25 பேர் மீது வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையின் தொடர் நடவடிக்கையால் இரு தரப்பை சேர்ந்த குமார், சீத்தாராமன், செந்தில்குமார், செந்தில் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து மேல்கவரப்பட்டை சேர்ந்த கிராம மக்கள் திடீரென அறப்போராட்டம் செய்வதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி நாகராசன் தலைமையில் போலீசார் மேல்கவரப்பட்டு மெயின்ரோட்டில் போராட்டத்தை தடுப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: