பழநி, மே 7: மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பழநி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தமிழ்நாடு அமெச்சூர் விளையாட்டுக் கழகம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகள் 15 வயதிற்குட்பட்டோர், சப்.ஜூனியர், ஜூனியர், 23 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் நடத்தப்பட்டது.