ஆவணமின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் ஆர்டிஓ அதிரடி

கரூர், மே 7: கரூர் கோட்டம் புகழூர் தாலுகா காருடையாம்பாளையம் பகுதியில் கரூர் ஆர்டிஓ சரவணமூர்த்தி வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவ்வழியே மூன்று லாரிகளில் முறையான அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள்இன்றியும், மணல் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக மணல் ஏற்றிவந்த லாரிகளை கைப்பற்றினார். அவை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று 3லாரி உரிமையாளர்கள், வாகனஓட்டிகளிடம் உரிய விசாரணை நடத்தி ஆர்டிஓ பரிந்துரையின் பேரில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: