ஆத்தூர், மே 3: பத்தாம் வகுப்பு தேர்வில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி நேகவர்த்தினி, 500க்கு 493 மதிப்பெண்களும், பிரித்திகா 490 மதிப்பெண்களும், மாணவர் லோகானந்த் 485 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் இளவரசு, செயலாளர் டாக்டர் ராமசாமி, பொருளாளர் செல்வமணி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.