முன்விரோத தகராறில் லோடுமேனை தாக்கிய ரவுடி கைது

திருச்சி, மே 3:  திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சின்னகவுண்டர் (27). லாரி ஷெட்டில் லோடுமேனாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி இளையராஜா (36) என்பவருக்கிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதில் சின்னகவுண்டர் அளித்த புகாரின் பேரில் கடந்த 20ம் தேதி இளையராஜா மீது காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி ஷெட்டில் வேலை செய்து கொண்டிருந்த சின்னகவுண்டரிடம் தகராறில் ஈடுபட்ட இளையராஜா நண்பர் தேவாவுடன் சேர்ந்து அவரை தாக்கி உள்ளார். இதில் தலையில் காயமடைந்த சின்னகவுண்டர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காந்தி மார்க்கெட் போலீசார் இளையராஜா மற்றும் தேவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட இளையராஜா மீது அடிதடி உள்ளிட்ட 8 வழக்குகள் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: